Google

Wednesday, February 27, 2008

Adai

அடை - கேரளா ஐயர் வீடுகளில் வாரத்திற்கு ஒருமுறை செய்யும் மாலை நேர டிபன். தேவையான் பொருட்கள்:

  1. புழுங்கல் அரிசி - ஒரு கப்
  2. கடலை பருப்பு - மூன்றில் ஒரு பங்கு கப் (1/3 cup)
  3. துவரம் பருப்பு - மூன்றில் ஒரு பங்கு கப்
  4. கருப்பு உளுத்தம்பருப்பு - மூன்றில் ஒரு பங்கு கப்
  5. மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
  6. சிவப்பு மிளகாய் - இரண்டு
  7. பெருங்காயம் - சிறிது
  8. கருவேபில்லை - சிறிது
  9. உப்பு - தேவைக்கு
  10. nallennai - oru adaikku irandu table spoon.

மேல் கூறிய பருப்பு வகைகள், மற்றும் மிளகு, மிளகாய் ஆகியவற்றை மூன்று மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு சிறிது நீர் சேர்த்து அரைக்க வேண்டும். தோசை மாவு அளவிற்கு நீர்க்க இருக்க கூடாது. அறைதவுடன் மாவில் பெருங்காயம் கருவேபில்லை சேர்த்து வார்க்கவும்.

இரும்பு தோசை கல்லில் (இரும்பில் வார்த்தால் நல்ல சுவையுடன் இருக்கும்), மாவை விட்டு நன்றாக பரத்தாவும். ஒரு டேபிள் ஸ்பூன் என்னை விட்டு வெந்து சிறிது சிவந்தவுடன் திருப்பி போட்டு மீண்டும் ஒரு டேபிள் ஸ்பூன் என்னை விட வேண்டும். அடை மொறுமொறுவென்று வரும்.

Monday, February 25, 2008

Rava Dosai

ரவா தோசை எனக்கு பிடித்த மாலை நேர டிபன். நாம் மாலை ரவா தோசை செய்ய வேண்டும் என்றால் காலையிலேயே இதற்கு தேவையான மாவை கரைத்து வைத்து விடுவது நல்லது. இதற்கு தேவையான பொருட்கள்.

  1. அரிசி மாவு - ஒரு கப்.
  2. ரவை - ஒரு கப்
  3. மைதா - முக்கால் கப்
  4. உப்பு - தேவையான அளவு
  5. புளித்த மோர் - நான்கு டேபிள் ஸ்பூன்.
தாளிக்க : -
  1. என்னை - ஒரு டேபிள் ஸ்பூன்
  2. வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கவும்)
  3. கடுகு - அறை டீஸ்பூன்
  4. சீரகம் - அறை டீஸ்பூன்.
  5. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  6. பச்சை மிளகாய் - ஒன்று (அல்லது தேவையான அளவு)
  7. karuvepillai - சிறிது
மேல் கூறிய அனைத்து மாவையும் உப்பு போட்டு நன்றாக கரைத்து வைத்து விட வேண்டும். மோரையும் சேர்த்து கரைத்து வைக்கவும். தோசைவார்க்க சிறிது நேரத்திற்கு முன் கடாயில் என்னை விட்டு, என்னை காய்ந்தவுடன் கடுகு, பச்சை மிளகாய், கரிவேபில்லை, சீரகம், வெங்காயம், பெருங்காயதூள் ஆகியவற்றை போட்டு வறுக்கவும். இவை சிவந்தவுடன் கரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி நன்றாக கலக்கவும். தேவை என்றால் நீர் சேர்த்துக்கொள்ளலாம். ரவா தோசை மாவு நன்றாக நீர்க்க இருக்க வேண்டும். தோசை மாவை விட நீர்க்க இருக்க வேண்டும். கல் நன்றாக காய்ந்தவுடன் மாவை ஓரத்திலிருந்து நடுவரை சுற்றி விட வேண்டும். என்னை விட்டு ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போட்டு மீண்டும் சிறிது என்னை விட வேண்டும். தோசை வார்ப்பது போல் நடுவிலிருந்து தோசை வார்க்க ஆரம்பிக்க கூடாது.

ஒரு சிலர் என்னைக்கு பதில் நெய் விட்டு ரவா தோசை வார்பர். நமக்கு எப்படி பிடிக்கிறதோ அப்படி வார்துக்கொள்ளலம்.