Google

Tuesday, February 19, 2008

Pongal

மற்றொரு காலை உணவு. இதற்கு தேவையான பொருட்கள்.

  1. அரிசி - ஒரு கப்
  2. பயத்தம்பருப்பு - கால் கப்
  3. மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
  4. இஞ்சி -ஒரு சிறிய துண்டு
  5. மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
  6. சீரகம் - அறை டேபிள் ஸ்பூன்
  7. கடுகு - அரை டீஸ்பூன்
  8. பெருங்காய பொடி - சிறிது
  9. எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  10. நெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  11. உப்பு - தேவையான அளவு
  12. முந்திரி பருப்பு -தேவைகேற்ப
  13. கரிவேபில்லை - ஒரு கொத்து
முதலில் அரிசியையும், பயத்தம் பருப்பையும் நன்றாக அலம்பி, ஒரு பத்துநிமிடம் ஊற வைக்கவும். பிறகு ஒரு பிரஷர் குக்கர் எடுத்துக்கொண்டு முதலில் எண்ணெயையும், ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யையும் விட்டு சூடானவுடன், கடுகு போட்டு வெடித்தவுடன், இஞ்சி, மிளகு, சீரகம் பெருங்கயபோடி கறிவேப்பில்லை ஆகியவற்றை போட்டு வறுக்கவும். சிவந்தவுடன் அரிசியையும் பருப்பையும் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு குக்கர்ஐ மூடவும். ஐந்திலிருந்து ஆறுமுறை கத்த விடவும். ஒரு கப் அரிசிக்கு ஐந்து கப் நீர் விடலாம். குக்கர் திறக்க வந்தவுடன் திறந்து மீதமுள்ள ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யையும் விட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். கமகமக்கும் பொங்கல் தயார். தேங்காய் சட்னி அல்லது கொத்சு சேர்த்து சூடாக சாப்பிடலாம்.

Dosai

மற்றொரு காலை உணவு. கிட்டதட்ட இட்லி போலவே இருக்கும் இதற்கு தேவையான பொருட்கள்.

  • புழுங்கல் அரிசி - நான்கு கப்
  • முழு உளுத்தம்பருப்பு - ஒரு கப்
  • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்.
  • உப்பு - தேவையான அளவு

    அரிசியை முதலில் ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் . அதே போல் உளுத்தம்பருப்பையும் வெந்தயத்தையும் ஒன்றாக ஆறு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். முதலில் க்ரிண்டேரில் உளுத்தம்பருப்பு வேந்திய கலவையை போட்டு அரைக்க விட வேண்டும். சிறிது சிறிதாக நீர் சேர்த்துக்கொள்ள வேண்தும். உளுத்தம்பருப்பு நிறைய நீர் பிடிக்கும். நன்றாக அரைந்தவுடன் ஒரு நன்றாக கொட்டவும். பிறகு அதே கல்லில் அரிசியை போட்டு நன்றாக மை போல் அரைக்க வேண்டும். உளுந்து அரைக்க அரை மணிநேரம் எடுக்கும். அரிசி அரைபட முப்பதைந்து நிமிடம் ஆகும். இரண்டையும்உப்பு போட்டு ஒன்றாக கலந்து (கையால்கலக்கவேண்டும்) மூடி வைக்கவும.
    இந்த கலவையில் சிறிது நீர் விட்டு நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளலாம். இட்லி மாவை போல் இந்த மாவு நிறைய நேரம் ஊரவேண்டிய அவசியம் இல்லை. காலையில் அரைத்து விட்டு மாலையில் உபாயோக படுத்தலாம். தோசை கல்லில் ஒன்றரை கரண்டி மாவு விட்டு நன்றாக பரத்தவும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு அடுப்பை சின்னதாகி விடவும். தோசை நல்ல முறுவலுடன் வரும்.

Idly

மிகவும் அருமயான, சத்து மிகுந்த காலை உணவு. செய்வது மிகவும் சுலபம். தேவையான பொருட்கள் -

  • புழுங்கல் அரிசி - மூன்று கப்
  • முழு உளுத்தம் பருப்பு - ஒரு கப்
  • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்.
  • உப்பு - ஒன்றேகால் டீஸ்பூன் (அல்லது தேவையான அளவு)

அரிசியை முதலில் ஆறு மணிநேரமாவது ஊறவைக்க வேண்டும். அதே போல் உளுத்தம்பருப்பையும் வெந்தயத்தையும் ஒன்றாக ஆறு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். முதலில் க்ரிண்டேரில் உளுத்தம்பருப்பு வேந்திய கலவையை போட்டு அரைக்க விட வேண்டும். சிறிது சிறிதாக நீர் சேர்த்துக்கொள்ள வேண்தும். உளுத்தம்பருப்பு நிறைய நீர் பிடிக்கும். நன்றாக அறிந்தவுடன் ஒரு பாத்திரத்தில் கொட்டவும். பிறகு அதே கல்லில் அரிசியை போட்டு நன்றாக மை போல் அரைக்க வேண்டும். உளுந்து அரைக்க அரை மணிநேரம் எடுக்கும். அரிசி அரைபட முப்பதைந்து நிமிடம் ஆகும். இரண்டையும்உப்பு போட்டு ஒன்றாக கலந்து (கையால் கலக்க வேண்டும்) மூடி வைக்கவும். இந்த மாவு ஊறுவதற்கு பதினெட்டிலிருந்து இருவது மணிநேரம் எடுக்கும். அடுத்த நாள் இட்லி வார்க்கும் பொழுது, இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி, மாவை விட்டு அடுப்பில் வேக வைக்க வேண்டும். இந்த மாவு வேகுவதற்கு இருவது நிமிடம் பிடிக்கும்.

இட்லி வெந்ததாஎன்று அறிய ஒரு குச்சியோ அல்லது கத்தியின் முனயயோ இட்ல்யில் குத்தினால் மாவு ஈஷமல் வரும். இதுவே அடையாளம்.

Sunday, February 17, 2008

Idly - Sambar.

இந்த சாம்பார் நாம் தினமும் செய்யும் சாம்பார் மாதிரி அல்ல. இதற்கு தேவையான பொருட்கள் -

  1. பயத்தம்பருப்பு - கால் கப்.
  2. சின்ன வெங்காயம் - பத்துதோல் உரித்து வைக்கவும்
  3. முருங்கைக்காய் - ஐந்து
  4. காரட் - ஒன்று நறுக்கியது.
  5. ஒன்று - ஒன்று நறுக்கியது
  6. புளிவிழுது - ஒரு டேபிள் ஸ்பூன்.
  7. பெரிய என்னை - ஒன்று (ஒரு டேபிள்)
  8. ஸ்பூன் பொடி - ஒரு டீஸ்பூன்.
  9. மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்.
  10. உப்பு - தேவைகேற்ப

தாளிக்க:-

  1. eNNai - oru table spoon
  2. kadugu - 1/2 teaspoon
  3. உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன
  4. பெருங்காயம் - ஒரு சிட்டிகை.
  5. சிவப்பு மிளகாய் - 1
முதலில் ஒரு பிரஷர் குக்கர் எடுத்து அதில் பயத்தம் பருப்பை இரண்டு நிமிடம் வறுக்கவும். பிறகு துவரம் பருப்பு, மேல் கூறிய காய்கறிகள், மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு போட்டு தேவையான நீர் விட்டுவேக விடவும். இரண்டு முறை whistle வந்தால் போதுமாக இருக்கும். பிறகு குக்கர் திறந்து வேண்டும் என்றால் சிறிது நேரம் கொதிக்க விடவும். ஒரு சிறிய கடையில் எண்ணெய் விட்டு , சூடானவுடன் கடுகு போட்டு வெடித்தவுடன், தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு வறுக்கவும். சிவந்தவுடன் சம்பரில் கொட்டவும். இட்லி,தோசை பொங்கல் ஆகியவற்றிக்கு இந்த சம்பரை உபாயோகபடுதலாம்.