Google

Tuesday, February 19, 2008

Dosai

மற்றொரு காலை உணவு. கிட்டதட்ட இட்லி போலவே இருக்கும் இதற்கு தேவையான பொருட்கள்.

  • புழுங்கல் அரிசி - நான்கு கப்
  • முழு உளுத்தம்பருப்பு - ஒரு கப்
  • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்.
  • உப்பு - தேவையான அளவு

    அரிசியை முதலில் ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் . அதே போல் உளுத்தம்பருப்பையும் வெந்தயத்தையும் ஒன்றாக ஆறு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். முதலில் க்ரிண்டேரில் உளுத்தம்பருப்பு வேந்திய கலவையை போட்டு அரைக்க விட வேண்டும். சிறிது சிறிதாக நீர் சேர்த்துக்கொள்ள வேண்தும். உளுத்தம்பருப்பு நிறைய நீர் பிடிக்கும். நன்றாக அரைந்தவுடன் ஒரு நன்றாக கொட்டவும். பிறகு அதே கல்லில் அரிசியை போட்டு நன்றாக மை போல் அரைக்க வேண்டும். உளுந்து அரைக்க அரை மணிநேரம் எடுக்கும். அரிசி அரைபட முப்பதைந்து நிமிடம் ஆகும். இரண்டையும்உப்பு போட்டு ஒன்றாக கலந்து (கையால்கலக்கவேண்டும்) மூடி வைக்கவும.
    இந்த கலவையில் சிறிது நீர் விட்டு நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளலாம். இட்லி மாவை போல் இந்த மாவு நிறைய நேரம் ஊரவேண்டிய அவசியம் இல்லை. காலையில் அரைத்து விட்டு மாலையில் உபாயோக படுத்தலாம். தோசை கல்லில் ஒன்றரை கரண்டி மாவு விட்டு நன்றாக பரத்தவும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு அடுப்பை சின்னதாகி விடவும். தோசை நல்ல முறுவலுடன் வரும்.

0 comments: