எனக்கு பிடித்த ராசா வகைகளில் இது ஒன்று. செய்யும் முறை
தேவையான பொருட்க்கள்:-
பைனாப்பிள் - ஒரு நடுத்தர கப் அளவு ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
புளி - அறை டேபிள் ஸ்பூன்
பச்ச மிளகாய் - மூன்று
மஞ்சள் போடி - அறை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
ரசம்போடி - அரை டீஸ்பூன்
தாளிக்க:-
நெய் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
முதலில் துவரம்பருப்பை மஞ்சள் போடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் முக்கள் கப் பைனாப்பிள் துண்டுகளை விழுது போல் அரிது அதிலிருந்து வடிகட்டி ஜூஸ் எடுத்துக்கொள்ளவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள கால் பங்கு பைனாப்பிள் துண்டுகளை போட்டு, புளி விழுது, தேவையான அளவு தண்ணீர், உப்பு, பச்சமிளகாய், மஞ்சள்பொடி, ரசபோடி போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும். முக்கால் பங்கு வெந்தவுடன், பைனாப்பிள் ஜூஸ் விட்டு மீண்டும் மூன்று நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெந்த துவரம்பருப்பை நீர்க்க விட்டு, நுரை வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவேண்டும்.
தாளிக்கும் கடையில், நெய் விட்டு, கைந்தவுடன், கடுகு, வெந்தயம், கருவேப்பில்லை, பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து ரசத்தில் கொட்ட வேண்டும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.
Sunday, June 22, 2008
Pineapple Rasam
Posted by Vidhya at 1:20 PM 0 comments
Labels: Pineapple Rasam, Rasam
Garlic Rasam
இது மற்றொரு வகை ரசம். ரசபொடி இல்லாமல் செய்யக்கூடிய ரசம். காலை சமையலில் மீதம் இல்லாத பொழுது இரவு சாப்பாடுக்கு இதை செய்து சாப்பிடலாம். செய்யும் முறை.
தேவையான பொருட்கள்:-
தக்காளி - இரண்டு
தனியா விதை - ஒரு டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
poondu - இரண்டு துண்டு
உப்பு - தேவைகேற்ப
புளி - எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு - அரை டீஸ்பூன்.
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்.
தாளிக்க:-
நெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
மேல் கூறிய அனைத்து பொருட்களையும் (மஞ்சல்போடிஉப்பு தவிர்த்து) மையாக அரைத்துகொள்ளவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில், இந்த விழுதை போட்டு, ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு, மஞ்சள் பொடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்ததும், பச்சவாசனை போனதும், மீண்டும் ஒன்று அல்லது ஒன்றரை கப் தணீர் விடவேண்டும். நன்றாக நுரைத்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு சிறு தவாவில், நெய்விட்டு, காய்ந்தவுடன், கடுகு, வெந்தயம், கருவேப்பில்லை, பெருங்காயம் போட்டு நன்றாக சிவந்தவுடன் ரசத்தில் கொட்டவேண்டும். கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறலாம். காலை முதல் மாலை வரை வேலை செய்து களைத்து வருபவர்கள் இந்த ரசம் வைத்து சாபிட்டால் உடல் வலி நிச்சயமாக நீங்கும்.
Posted by Vidhya at 12:56 PM 0 comments
Labels: Garlic Rasam, Rasam
Wednesday, April 16, 2008
Vepampoo Rasam
வேப்பம்பூ - வயிற்றுக்கு மிகவும் நல்ல மருந்து. வயிற்று கடுப்பு இருப்பவர்கள் வேபம்பூவை நெய்யில் வறுத்து சாடத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் வயிறு சரியாகும் என்பது என் பாட்டிகூறுவது. வேப்பம்பூ ரசம் செய்ய தேவையான பொருட்கள்.
தக்காளி - இரண்டு
புளி- சிறு துண்டு (அல்லது ஒரு டீஸ்பூன் விழுது)
மஞ்சள் பொடி - அரைடீஸ்பூன்
ரசம் பொடி - இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
துவரம்பருப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன் (வேக வைத்துக்கொள்ளவும்)
வேப்பம்பூ - ஒரு டேபிள் ஸ்பூன்.
தாளிக்க:-
நெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கரிவேபில்லை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
ஒரு பாத்திரத்தில், தக்காளியை பொடியாக நறுக்கி புளியை ஒரு கப் நீர் விட்டு கரைத்து புளி தண்ணீரை விட்டு, மஞ்சள் பொடி, ரசபொடி, உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். தக்காளி வெந்தவுடன், நன்றாக மசித்து, அதனுடன் வேகவைத்து வைத்துள்ள பருப்பை சிறிது நீர் கரைத்து புளி தக்காளியுடன் விடவும். நுரைத்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். சிறு கடாயில், அரை டீஸ்பூன் நெய் விட்டு, கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம், கரிவேபில்லை போட்டு சிவக்க வறுத்து ரசத்தின் மேல் கொட்டவும். மீண்டும் அதே கடையில் மீதமுள்ள நெய் விட்டு வேபம்பூவை நன்றாக கரிய வருக்கவேண்டும். கரிவதற்கு முன் அடுப்பை அணைத்து, வேபம்பூவை ரசத்தில் கொட்டவேண்டும். பிறகு கொத்தமல்லி போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். கொத்தமல்லி, வேப்பம்பூ மற்றும் கரிவேபில்லை வாசனை ரசத்தில் இறங்கியவுடன் சூடான சாதத்துடன் பரிமாறலாம்.
Posted by Vidhya at 10:05 PM 2 comments
Labels: Rasam, vepampoo Rasam