திப்பிலி - உடல் வலி, சளி, ஜுரம் ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது. இது திப்பிலி ரசம் செய்யும் முறை.
தேவையான பொருட்கள்:
திப்பிலி - ஒரு சிறிய துண்டு
தனிய - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு - அரை டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் டேபிள் ஸ்பூன்
பெருங்காய போடி - சிறிது
தக்காளி - ஒன்று
புளி- இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் போடி - அரை டீஸ்பூன்.
தாளிக்க:-
நெய் - இரண்டு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிது.
ஒரு கடாயில் திபில்லியை போட்டு நன்றாக வருக்க வேண்டும். ஆறியவுடன், தனிய, மிளகு, சீரகம், தக்காளி, ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்துக்கொள்ளவேண்டும். பிறகு, ரசம் வைக்கும் பாத்திரத்தில், இந்த விழுதை போட்டு, புளி விழுது, சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள் போடி போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். குறைந்தது பத்து நிமிடமாவது கொதிக்க வேண்டும் அப்பொழுது தான் திப்பிளியின் பச்ச வாசனை போகும். பிறகு தேவையான அளவு நீர் விட்டு, நுரைத்தவுடன் அடுப்பை அணைத்து விடவேண்டும். சிறு கடாயில், நெய் விட்டு, கடுகு வெந்தயம், பெருங்காயம், கருவேப்பில்லை போட்டு சிவந்தவுடன் ரசத்தில் கொட்ட வேண்டும். கொத்தமல்லி தழை தூவி இறக்கவேண்டும்.
ஜுரம் வந்து தேறியவர்கள் இதை வைத்து சாப்பிட்டால் உடல் வலி நிச்சயம் நீங்கும்.
3 weeks ago
1 comments:
Sounds nice...my mommy used to make this(back home)I miss it!
You have too many blogs:) I read few of them today....will swing by!
Post a Comment