Google

Friday, July 18, 2008

Kollu Rasam

கொள்ளு - உடல் இளைக்க உபயோகப்படுத்தும் ஒரு பொருள். கொள்ளின் மூலம், ரசம், துவையல் ஆகியவை செய்ய இயலும். கொள்ளு ரசம் செய்யும் முறை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-
கொள்ளு - இரண்டு டீஸ்பூன்
தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
தக்காளி - 1 1/௨
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
புளி - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:-
நெய் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு

ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிறிது நேரம் சிவக்க வருக்க வேண்டும். ஆறியவுடன், கொள்ளுடன், தனியா, முக்கள் தக்காளி, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை vizhuthaaga அரைக்கவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள தக்காளியை போட்டு, புளி விழுது, போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஏழு நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நுரைத்தவுடன் அடுப்பை அனைத்து விடவும். தாளிக்கும் சட்டியில், எண்ணெய் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும். கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு அருந்தலாம்.

Tuesday, June 24, 2008

Thippili Rasam

திப்பிலி - உடல் வலி, சளி, ஜுரம் ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது. இது திப்பிலி ரசம் செய்யும் முறை.

தேவையான பொருட்கள்:

திப்பிலி - ஒரு சிறிய துண்டு
தனிய - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு - அரை டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் டேபிள் ஸ்பூன்
பெருங்காய போடி - சிறிது
தக்காளி - ஒன்று
புளி- இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் போடி - அரை டீஸ்பூன்.

தாளிக்க:-

நெய் - இரண்டு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிது.

ஒரு கடாயில் திபில்லியை போட்டு நன்றாக வருக்க வேண்டும். ஆறியவுடன், தனிய, மிளகு, சீரகம், தக்காளி, ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்துக்கொள்ளவேண்டும். பிறகு, ரசம் வைக்கும் பாத்திரத்தில், இந்த விழுதை போட்டு, புளி விழுது, சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள் போடி போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். குறைந்தது பத்து நிமிடமாவது கொதிக்க வேண்டும் அப்பொழுது தான் திப்பிளியின் பச்ச வாசனை போகும். பிறகு தேவையான அளவு நீர் விட்டு, நுரைத்தவுடன் அடுப்பை அணைத்து விடவேண்டும். சிறு கடாயில், நெய் விட்டு, கடுகு வெந்தயம், பெருங்காயம், கருவேப்பில்லை போட்டு சிவந்தவுடன் ரசத்தில் கொட்ட வேண்டும். கொத்தமல்லி தழை தூவி இறக்கவேண்டும்.

ஜுரம் வந்து தேறியவர்கள் இதை வைத்து சாப்பிட்டால் உடல் வலி நிச்சயம் நீங்கும்.

Mysore Rasam

இது மற்றொரு வகை ரசம். இவ்வகை ரசம் செய்யும் முறை.

தேவையான் பொருட்க்கள்:-

தக்காளி - இரண்டு
துவரம் பருப்பு - கால் கப்
பச்சை மிளகாய் - இரண்டு
மஞ்சள்பொடி - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
மிளகு பொடி - அரை டீஸ்பூன்.

தாளிக்க:-
நெய் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

முதலில் துவரம் பருப்பை சிறிது மஞ்சள் பொடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில், தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு, மஞ்சள்பொடி, உப்பு, மிளகு பொடி, பச்சை மிளகாய், தேவையான அளவு நீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தக்காளி நன்றாக வெந்து, பச்ச வாசனை போனவுடன், வேகவைத்து வைத்துள்ள பருப்பை சிறிது நீர் சேர்த்து, தக்காளியின் மேல் கொட்ட வேண்டும். நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து விடலாம். ஒரு சிறிய கடையில், எண்ணெய், நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு, வெந்தயம், பெருங்காயம் போட்டு நன்றாக வறுபட்டவுடன்,ரசத்தின் மேல் கொட்டவும். கொத்தமல்லி தழை தூவி சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு சாதத்துடன் பரிமாறலாம்.