Google

Friday, July 18, 2008

Kollu Rasam

கொள்ளு - உடல் இளைக்க உபயோகப்படுத்தும் ஒரு பொருள். கொள்ளின் மூலம், ரசம், துவையல் ஆகியவை செய்ய இயலும். கொள்ளு ரசம் செய்யும் முறை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-
கொள்ளு - இரண்டு டீஸ்பூன்
தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
தக்காளி - 1 1/௨
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
புளி - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:-
நெய் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு

ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிறிது நேரம் சிவக்க வருக்க வேண்டும். ஆறியவுடன், கொள்ளுடன், தனியா, முக்கள் தக்காளி, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை vizhuthaaga அரைக்கவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள தக்காளியை போட்டு, புளி விழுது, போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஏழு நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நுரைத்தவுடன் அடுப்பை அனைத்து விடவும். தாளிக்கும் சட்டியில், எண்ணெய் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும். கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு அருந்தலாம்.