Google

Sunday, June 22, 2008

Garlic Rasam

இது மற்றொரு வகை ரசம். ரசபொடி இல்லாமல் செய்யக்கூடிய ரசம். காலை சமையலில் மீதம் இல்லாத பொழுது இரவு சாப்பாடுக்கு இதை செய்து சாப்பிடலாம். செய்யும் முறை.

தேவையான பொருட்கள்:-
தக்காளி - இரண்டு
தனியா விதை - ஒரு டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
poondu - இரண்டு துண்டு
உப்பு - தேவைகேற்ப
புளி - எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு - அரை டீஸ்பூன்.
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்.

தாளிக்க:-

நெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிது

மேல் கூறிய அனைத்து பொருட்களையும் (மஞ்சல்போடிஉப்பு தவிர்த்து) மையாக அரைத்துகொள்ளவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில், இந்த விழுதை போட்டு, ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு, மஞ்சள் பொடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்ததும், பச்சவாசனை போனதும், மீண்டும் ஒன்று அல்லது ஒன்றரை கப் தணீர் விடவேண்டும். நன்றாக நுரைத்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு சிறு தவாவில், நெய்விட்டு, காய்ந்தவுடன், கடுகு, வெந்தயம், கருவேப்பில்லை, பெருங்காயம் போட்டு நன்றாக சிவந்தவுடன் ரசத்தில் கொட்டவேண்டும். கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறலாம். காலை முதல் மாலை வரை வேலை செய்து களைத்து வருபவர்கள் இந்த ரசம் வைத்து சாபிட்டால் உடல் வலி நிச்சயமாக நீங்கும்.

0 comments: