Google

Wednesday, February 20, 2008

Rasam Powder

ரசம் - கேரள ஐயர் வீடுகளில் தனியாக ரசபொடி செய்து ரசம் செய்ய மாட்டார்கள். சாம்பார் பொடியயே ரசத்திற்கும் உபயோகபடுத்துவர். தமிழ்நாடு வீடுகளில் ரசபொடிசெய்து ரசம் செய்வர். ரசபொடிக்கு தேவையான பொருட்கள்.

  1. தனியா - கால் கப்.
  2. சிவப்பு மிளகாய் வத்தல் - ஒரு சிறிய கப்.
  3. மிளகு - இரண்டு டேபிள் ஸ்பூன்.
  4. சீரகம் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  5. வெந்தியம் - கால் டேபிள் ஸ்பூன்.
  6. கடுகு - ஒரு டேபிள் ஸ்பூன்.
  7. துவரம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
  8. விரளிமஞ்சள் - ஒரு சிறிய துண்டு
  9. பெருங்காய பொடி - இரண்டு அல்லது மூன்று சிட்டிகை.
ஒரு கடையில் மேல் கூறிய அனைத்தையும் ஒவ்வொன்றாக வறுக்கவும். கரிய விடக் கூடாது. சிவந்தவுடன் தனியாக ஒரு தட்டில் எடுத்து கொட்டி ஆற விடவும். ஆரியவுடன் நன்றாக பொடியாக அரைத்துவைத்துக் கொள்ளவும். பதினைந்து நாளுக்கு ஒரு முறை அரைத்து வைத்துக் கொண்டால் ரசம் மிகவும் வாசனையுடன் சுவையாக இருக்கும். நிறைய அரைத்து வைத்துக் கொள்பவர்கள், சிறிது வெளியே வைத்துக் கொண்டு மீதியை பிரீசெரில் வைத்துக் கொள்ளலாம்.

0 comments: