Google

Tuesday, February 19, 2008

Idly

மிகவும் அருமயான, சத்து மிகுந்த காலை உணவு. செய்வது மிகவும் சுலபம். தேவையான பொருட்கள் -

  • புழுங்கல் அரிசி - மூன்று கப்
  • முழு உளுத்தம் பருப்பு - ஒரு கப்
  • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்.
  • உப்பு - ஒன்றேகால் டீஸ்பூன் (அல்லது தேவையான அளவு)

அரிசியை முதலில் ஆறு மணிநேரமாவது ஊறவைக்க வேண்டும். அதே போல் உளுத்தம்பருப்பையும் வெந்தயத்தையும் ஒன்றாக ஆறு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். முதலில் க்ரிண்டேரில் உளுத்தம்பருப்பு வேந்திய கலவையை போட்டு அரைக்க விட வேண்டும். சிறிது சிறிதாக நீர் சேர்த்துக்கொள்ள வேண்தும். உளுத்தம்பருப்பு நிறைய நீர் பிடிக்கும். நன்றாக அறிந்தவுடன் ஒரு பாத்திரத்தில் கொட்டவும். பிறகு அதே கல்லில் அரிசியை போட்டு நன்றாக மை போல் அரைக்க வேண்டும். உளுந்து அரைக்க அரை மணிநேரம் எடுக்கும். அரிசி அரைபட முப்பதைந்து நிமிடம் ஆகும். இரண்டையும்உப்பு போட்டு ஒன்றாக கலந்து (கையால் கலக்க வேண்டும்) மூடி வைக்கவும். இந்த மாவு ஊறுவதற்கு பதினெட்டிலிருந்து இருவது மணிநேரம் எடுக்கும். அடுத்த நாள் இட்லி வார்க்கும் பொழுது, இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி, மாவை விட்டு அடுப்பில் வேக வைக்க வேண்டும். இந்த மாவு வேகுவதற்கு இருவது நிமிடம் பிடிக்கும்.

இட்லி வெந்ததாஎன்று அறிய ஒரு குச்சியோ அல்லது கத்தியின் முனயயோ இட்ல்யில் குத்தினால் மாவு ஈஷமல் வரும். இதுவே அடையாளம்.

0 comments: